CM Pinarayi Vijayan vs Pon Radhakrishnan
CM Pinarayi Vijayan vs Pon Radhakrishnan

CM Pinarayi Vijayan vs Pon Radhakrishnan – திருவனந்தபுரம்: சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, அவரது காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால், கேரள போலீசார் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கூறி , நேற்று குமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ” சபரிமலையில் பாதுகாப்பு பணியில், கேரள போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சபரிமலை சென்ற பொன் ராதாகிருஷ்ணனை ஐ.பி.எஸ் அதிகாரி யதீஷ் சந்திரா எந்தவித அவமரியாதையும் செய்யவில்லை.

தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அவர் கூறியதால் தான், காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் இதில் எந்த தவறும் இல்லை.

மேலும், கேரள போலீசார் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள், அவர்களின் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சபரிமலை பிரச்சினையை வைத்து கேரளாவை போர்கள பூமியாக மாற்ற யார் நினைத்தாலும் அது நடக்காது” இவ்வாறு கூறினார்.