தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
CM Order On Ration Things : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்து வீடுகளில் இருந்து வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பொருட்கள் அனைத்தையும் வரும் நவம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தற்போது வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்து 5 கிலோ கூடுதலாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.