உலகத்துக்கே படியளக்கும் விவசாயியாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி என விவசாயிகள் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
CM EPS Wishes to Formers : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மக்களின் தேவைகளை எது பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கல்வி விவசாயம் என அனைத்து துறைகளிலும் பெருமை கொள்ளும் அளவிற்கு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
இன்று தேசிய விவசாயிகள் தினம் என்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்த பதிவில் உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 மற்றும் இலவச தொகுப்பிற்கான டோக்கன் டிசம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வீடு வீடாக சென்று வழங்கப்படும்.
அதன்பின்னர் ரூபாய் 2500 மற்றும் இலவச பொருட்கள் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரையில் வழங்கி முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.