CM EPS in Tuitcorin

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் ஏர் கலப்பை மற்றும் செங்கோலை பரிசாக வழங்கியுள்ளனர்.

CM EPS in Tuitcorin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய வழியில் அப்படியே பின்பற்றி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு வேல், செங்கோல் மற்றும் ஏர்கலப்பை ஆகியவற்றை அளித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான அதிமுக தொண்டர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.‌