CM EPS Anouuncement on Corona Vaccine

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு இலவசமாக செலுத்தப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

CM EPS Anouuncement on Corona Vaccine : சீனாவின் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அடங்கிய பாடில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தரமான சிகிச்சைகள் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சில மருந்துகள் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பட்டவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இம்மருந்து இலவசமாக செலுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகிலேயே யாரும் இதுவரை இப்படியான அறிவிப்பை வெளியிடாத நிலையில் தமிழக முதல்வர் இவ்வாறு அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.