எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்வது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
CM EPS Announcement About SPB : இந்திய சினிமாவில் பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவ்வளவு நாளாக மருத்துவமனையில் இருந்து வந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.
தற்போது எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மொழிகள் தாண்டி சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.. SPB-ன் மறைவு குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை
நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இதனால் திரையுலகப் பிரபலங்கள், எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.