CM Edappadi Palanisamy :
சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் அங்கங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையை பொறுத்தவரையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கு குடிநீர் பஞ்சம் தற்சமயம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமின்றி, சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் முற்றிலும் வறண்டு போய் உள்ளதால் சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தொய்வு நிலவி வருகிறது.
இந்நிலையில் கேரள அரசு தாமாக முன் வந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு தற்போதைய சூழலில் தங்களுக்கு தேவையில்லை என்று நிராகரித்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.,
விமானத்தில் திடீர் கோளாறு! அவசரமாக பாதியிலேயே திரும்பிய முதல்வர்
ஆனால் அண்டை மாநிலம் வழங்கும் நீரை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் அது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.