சினிமாத் துறையிலும் சில பணிகளுக்கு தளர்வு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
CM Announcement to Cinema Field : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகளைத் தவிர மற்ற எந்த வேலைகளும் நடைபெறவில்லை.
இதனால் சினிமாத்துறை உட்பட அனைத்தும் முடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்களாக சினிமாத்துறை முடங்கியிருந்தது.
விஜய் படத்தை இயக்கிய மிஷ்கின்.. இவரால் ஹிட்டான பாடல் – இந்த விசயம் தெரியுமா?
இந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஷூட்டிங் இல்லாத போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்காவது அனுமதி அளியுங்கள் என கோரிக்கை வைத்திருந்தனர்.
தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மே 11ம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி இனி திரைப்படம் மற்றும் சீரியல் களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.