அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்கள் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
CM Announcement on Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரானா பேரிடர் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் நமது மாநிலமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் ஆரம்பத்தில் விடுவிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசியல் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
ஒரு தலைவரின் ஆளுமை திறன் என்பது, இக்காட்டான, எதிர்பாராத சூழ்நிலைகளில் எவ்வாறு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்வது என்பதை பொருத்தே அமையும். அவ்வாறு, தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தனது ஆளுமை திறனால் மிகவும் சிறப்பான முறையில் எதிர்கொண்டு, மாநிலத்தை வழிநடத்தி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
ஏற்கனவே, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 சதவீதத்தை எட்டியுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக குறைந்ததுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ”கொரோனா தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்பட்டவுடன் அனைத்து தமிழக மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்று மாண்புமிகு முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இது வரலாறு காணாத ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ கொடிய நோய் சார்ந்த பேரிடர்கள் வந்திருந்தாலும் எந்த ஒரு மாநிலமும் அதற்கான மருந்தை அதன் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கியது கிடையாது. முதல் முறையாக இதை போன்ற ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, இது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கான சான்றாகவே கருத்தப்படுகிறது.
இதை பின்பற்றி, பிற மாநிலங்களான மத்திய பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவையும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்த நிகழ்வு தமிழகத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எவ்வாறு நாட்டிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக எடுத்துச் செல்கிறார் என்பதை பறைசாற்றுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் பலதரப்பட்ட மக்களும் பயனடையப்போவதால், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் கொடுத்து வருகின்றனர்.