மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் குறித்த முக்கிய தகவலை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Cinema Ticket Rate Updates : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள், கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!
பல மாதங்களாக மூடியிருந்த திரை அரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் பழைய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்!
அந்தப் பேட்டியில் இந்த முதல் 40 சதவீதம் திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. தமிழ் தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. மேலும் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையே தொடர்ந்து வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.