Cibi 1st Post After Bigg Boss5

12 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய சிபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.

Cibi 1st Post After Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீதம் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 97வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் கொடுத்த டீலை ஏற்று 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சிபி. ராஜுவுக்கு அடுத்ததாக டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்த சிபி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி. தன்னிடம் அன்பை செலுத்தி தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்ட சக போட்டியாளர்களுக்கு நன்றி. இவ்வளவு நாளாக உன்னை பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்த ரசிகப் பெருமக்களுக்கு மிகப்பெரிய நன்றி என பதிவு செய்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் நல்ல மனிதனாக, நல்ல ஒரு எண்டர்டெயினராக இருக்க முயற்சி செய்வேன் என பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். ‌‌