“சியான் 61” படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோபுர’ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது அதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், இயக்குனர் ஞானவேல் ராஜா ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான கதாநாயகியை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்திருப்பதாகவும் படத்தின் கதை மிகவும் பிடித்துள்ளதால் ராஷ்மிகா உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.