Chiyaan Vikram : கஜா புயலால் டெல்டா மாவட்டங்களே ஸ்தம்பித்து போயுள்ளது. தஞ்சை, நாகை, புக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் இம்மாவட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதில் இருந்தும் இளைஞர்கள் உதவி செய்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜி.வி பிரகாஷ், ரஜினி காந்த் மற்றும் பலர் உதவி செய்துள்ளனர்.
லைகா நிறுவனமும் ரூ 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிதியளித்து இருந்தது.
இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் சீயான் விக்ரம் அவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்காக உதவி செய்ய முன் வந்துள்ளார்.
அதாவது தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் (25 லட்சம்) ஆன்லைன் RTGS மூலம் இன்று வழங்குகிறார். இதனால் விக்ரமிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பல பிரபலங்கள் டெல்டா மாவட்ட மக்களுக்காக உதவ முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.