Chithra Voice Note Before Suicide

தற்கொலைக்கு முன் சித்ரா தன் மாமனாருடன் பேசிய ஆடியோ பதிவு போலீசாரிடம் சிக்கியுள்ளது.

Chithra Voice Note Before Suicide : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு ஹேமநாத் தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சித்ரா அவருடைய மாமனாரிடம் உங்கள் மகன் என்னை சித்ரவதை செய்கிறார் என்று பேசியுள்ள ஆடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனை வைத்தே போலிசார் சித்ராவின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.