சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Chithra Husband Arrest : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. தொகுப்பாளினியாக பல்வேறு சேனல்களில் பணியாற்றிய இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவருடைய பெற்றோர் இது தற்கொலை அல்ல சித்ராவின் கணவன் ஹேமநாத் தான் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்கள்.
போலீசாரும் ஹேம்நாத் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்துள்ளனர்.