Chithra Husband Arrest in New Case

ஒன்றரை கோடி பணத்தை மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஏமாற்றிய சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chithra Husband Arrest in New Case : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை யாக வலம் வந்தவர் சித்ரா. சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர்கள் கூறிவந்த நிலையில் விசாரணை நடந்து வருகின்றது.

இதன் காரணமாக சித்ராவின் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் இவர் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஒன்றரை கோடி பணம் மோசடி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.