Chithra Friends Shocked Interview

சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ஒருவர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chithra Friends Shocked Interview : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. இவர் கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தற்கொலை முடிவுக்கு அவருடைய கணவர் தான் காரணம் என போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது சித்ராவின் தோழி ரேகா நாயர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் நண்பர் ஒருவருக்கு சித்ரா மீது ஒரு கண் இருந்தது. அவர் ஒரு அமைச்சரின் மகன் கூட. இதுபற்றி ஹேம்நாத் கூட என்னிடம் அப்ரோச் செய்து இருந்தார் என பேசியுள்ளார்.

அதேபோல் சித்ராவின் இன்னொரு தோழி சித்ரா சொகுசு பங்களா கார் என கிடுகிடுவென வளர அரசியலாளர் ஆதரவு தான் காரணம் என அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் ஒருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அவரும் அந்த அமைச்சரின் மகனுக்கு நெருங்கிய நண்பர் என தெரிவித்துள்ளார்.

சித்ராவின் தோழிகள் இவ்வாறு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் சித்ராவின் மரணத்தில் மர்மங்கள் கூடி கொண்டே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.