தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் கோபமடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் சிரஞ்சீவி. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Chiranjeevi leaving in the middle of the show:

தெலுங்கு சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக இருப்பவர்தான் சிரஞ்சீவி. இவர் பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது வெளியான படம்தான் “ஆச்சார்யா”.

இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மிகவும் மனம் வருத்தத்துடன் இருந்த சிரஞ்சீவியை சுற்றுலா போல் சென்று வருமாறு அவரின் நெருங்கிய நண்பர்கள் வற்புறுத்தியதால் சென்று வந்தார்.

வந்த பிறகு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளர் ஆச்சார்யா படத்தின் தோல்வியை குறித்து ஏதோ பேசியுள்ளார். அதற்கு கோபமடைந்த சிரஞ்சீவி பாதி நிகழ்ச்சியிலே வெளியேறிவிட்டார். இதனால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.