சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Chinnathirai Shooting Update : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த வைரஸ் தொற்றின் காரணமாக சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொடா குடிகாரியாக அஞ்சனா செய்யும் அட்டகாசம்.. – அவரின் கணவர் வெளியிட்ட வீடியோ.!
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசுகள் அந்த மாநிலங்களுக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.
மேலும் கடந்த வாரம் சூட்டில் அல்லாத படங்களுக்கு போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை செய்து கொள்ளலாம் என அறிவித்தது. அதற்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதனையடுத்து தற்போது சின்னத்திரை ஷூட்டிங் மனைவி நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
ஆனால் கீழே குறிப்பிட்டுள்ள கண்டிஷன்களை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அந்த கண்டிஷன்கள் இதோ
* சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது
* படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்
* படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
* தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது
* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
என அறிவுறுத்தியுள்ளது.
இதனால் சீரியல் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட்டு அனைத்து சேனல்களிலும் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த எபிசோட்க்கு என்ன செய்வது என தெரியாமல் சீரியல்கள் நிறுத்தப்பட்டதும் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழக தொலைகாட்சிகளில் சீரியல்களே வேண்டாம் என கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது.