Chinmayee Tweet : நண்பனே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தான் என ஒருவரின் வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமையை பற்றி சின்மயி பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியுலகிலும் நடக்கும் பாலியல் வன்முறைகளை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பிரபல பாடகியான சின்மயி.
இதனால் சின்மயி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அவர் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.
தற்போது இளைஞர் ஒருவர் தான் பள்ளியில் படித்த போது நடந்த பாலியல் கொடுமை பற்றி பெயர் சொல்லாமல் சின்மயியிடம் கூறியுள்ளார்.
அந்த இளைஞன் கூறியதை சின்மயி டீவீட்டாக பதிவிட்டுள்ளர். அந்த இளைஞர் விளையாட்டாக ஆசிரியரை கிண்டலடித்ததை வைத்து தன்னுடைய நண்பன் தன்னை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் இது குறித்து தன்னுடைய தந்தையிடம் கூறிய பிறகு தான் தனக்கு அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை பதிவிட்ட சின்மயி ஆண்களுக்கும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
Trigger warning.
I got this message from a boy being bullied and sexually abused by a classmate.
Men need to start talking. About abuse that happens to you from other men. pic.twitter.com/1kjsTC1bAD
— Chinmayi Sripaada (@Chinmayi) February 22, 2019