China Tennis : சீனாவில் நடை பெற்று வரும் ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு இந்திய வீரர்கள் ஸ்ரீராம்,ஜீவன் ஜோடி ஜோடி மற்றும் சாகேத், ராம்குமார் ஜோடி முன்னேறி உள்ளனர்.
சீனாவில் ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைப்பெற்று வருகின்றது.
இதன் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம், ஜீவன் ஜோடி 7-5, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு நுழைந்து இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சாகேத், ராம்குமார் ஜோடி 6-3, 3-6,10-8 என்ற செட் கணக்கில் சீன வீரர்களை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.
ஒற்றையர் பிரிவில் இந்தியா தோல்வி :
இதே தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்குபெற்ற ராம்குமார் 6-7,4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.