Child Pleasure : குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை அந்த பாக்கியம் சிலருக்கு கிடைக்காமல் போய் அவர்களது வாழ்க்கையே பெரும் போராட்டமாகவே மாறிவிடுகிறது.

குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பதற்கு முன்னோர்கள் சாபம், குலதெய்வ சாபம்,பெண்கள் சாபம் பித்ருதோஷம் இவையே மூலகாரணமாக கூறப்படுகிறது.

சில பரிகாரங்கள் ஆலயத்தில் சென்று நிறைவேற்ற வேண்டும். ஒரு சில பரிகாரங்களை நமது இல்லத்தில் நிறைவேற்றலாம், அவற்றில் ஒரு பரிகாரத்தை பற்றிதான் இப்போது நாம் பார்ப்போம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு:

பரிகாரம் தொடங்குவதற்கு முன்முழுமுதற்கடவுளான விநாயகரையும் நமது குலதெய்வத்தையும் நினைத்து துவங்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

கிழங்கு மஞ்சள் 1 பெரியது,
பொன் மஞ்சள் வண்ணத்தில் 1 துணி.
வியாழக்கிழமை காலை குரு ஹோரை அதாவது 6 மணிமுதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை முடிக்க வேண்டும் .

நமது இல்லத்தில் உள்ள பெரியோரை அதாவது மாமனார் ,மாமியார் அல்லது தாய், தந்தை இவர்களது வலது கையில் மஞ்சள் கிழங்கை கொடுத்து இடது கையால் மூடிக் கொள்ள வைக்க வேண்டும்.

கிழக்கு பார்த்தவாறு இவர்கள் நிற்கவேண்டும். குழந்தை இல்லாத தம்பதியர் கணவன் மனைவி இருவரும் காலையில் குளித்துவிட்டு சுத்தமான ஆடையை உடுத்தி தம்பதி சகிதமாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

அவர்களிடமிருந்து மஞ்சள் கிழங்கை பெற்றுக்கொண்டு அதற்கு மஞ்சள் ஆடை சாற்றி அல்லது மஞ்சள் துணியினால் முடிபோட்டு தாம்பூலத் தட்டில் வைக்கவும். நீங்கள் வைக்கும் மஞ்சள் துணியில் முடிச்சு போடப்பட்ட கிழங்கு தான் தக்ஷிணாமூர்த்தி ஆகும்.

54 அல்லது 108 கொண்டைகடலை மாலை சாற்றி, மஞ்சள் வாழைப் பழம், பாயாசம், சர்க்கரைப் பொங்கல், இரண்டு லட்டு இவற்றை நெய்வேத்தியம் செய்ய வேண்டும் இந்தப் பூஜைகள் அனைத்தும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறாக 16 வாரங்கள் இந்தப் பூஜையை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் செய்ய முடியாத பட்சத்தில், பெண்கள் மட்டுமே இந்த பூஜையை கடைப்பிடிக்கலாம். மாதவிலக்கு நேரத்தில் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

பரிகார பூஜை தொடங்கும் முதல் வியாழக்கிழமை மட்டும் பெரியோர்களின் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் .

வாரவாரம் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மேற்கண்ட பரிகார பூஜையை முழு மனதோடு ,முழு நம்பிக்கையோடு தட்சிணாமூர்த்தியை நினைத்து வழிபடும் போது குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் ஆணித்தரமான உண்மையாகும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.