சேரன் பிக் பாஸை விட்டு வெளியேறிய பின்பு அனைவர்க்கும் நன்றி கூறி ட்வீட் செய்ததை அடுத்து மீண்டும் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.
Cheran Tweet About Bigg Boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டது ஒட்டு மொத்தமாக பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருந்தது.
பிக் பாசில் இருந்து வெளியேறியதும் சேரன் அனைவரும் நன்றி தெரிவித்து தன்னுடைய முதல் டீவீட்டை பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் பிக் பாஸ் குறித்து ட்வீட் செய்துள்ளார், அந்த டீவீட்டில் நானும் திரும்பி பார்க்கிறேன் நான் சொன்னதுபோல என்னால் இருக்க முடிந்ததா.. இருந்தேனா என.. என்னைப் பொறுத்த வரை வெற்றி தோல்வி தாண்டி இது புது அனுபவம். இவ்வுலகில் நாம் நாமாக இருப்பதுதான் கடினம்.. வாழ்க்கைச்சூழல் நம்மை வாழவிடாது.. வாழமுடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலி. நான் பாக்யம் செய்தவன் என கூறியுள்ளார்.
நானும் திரும்பி பார்க்கிறேன்
நான் சொன்னதுபோல என்னால் இருக்க முடிந்ததா.. இருந்தேனா என..
என்னைப்பொறுத்தவரை வெற்றி தோல்வி தாண்டி இது புது அனுபவம். இவ்வுலகில் நாம் நாமாக இருப்பதுதான் கடினம்.. வாழ்க்கைச்சூழல் நம்மை வாழவிடாது.. வாழமுடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலி. நான் பாக்யம் செய்தவன். https://t.co/uuvux4o4j5— Cheran (@directorcheran) September 26, 2019