பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறிவிட்டார் என்கிற செய்தி குறித்து இயக்குனர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Cheran shock about dharshan eviction in biggboss home – 90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.
கவினுக்கு அதிகம் பேர் வாக்களித்ததால் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார்.
இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவருக்கு முன் சேரன் வெளியேற்றப்பட்டதும் பலருக்கும் பிடிக்கவில்லை.
இந்த வாரம் எப்படியும் ஒருவர் வெளியாக வேண்டும். கோல்டன் டிக்கெட்டை பெற்று முகேன் இறுதி போட்டியாளராக தேர்வாகி விட்டார்.
தற்போது எவிக்ஷன் நாமினேஷனில் சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரும் உள்ளனர்.
இதில், இந்த வாரம் தர்ஷன் வெளியேறுகிறார் என்கிற செய்தி நேற்று சமூகவலைத்தளம் முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும் விஜய் டிவிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர்.அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்..அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.’ என பதிவிட்டுள்ளார்.