உங்களை வாழ வைத்த மக்களை, உணர்வுகளை, ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை விட இந்த படம் பெரியதல்ல என இயக்குனர் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சேரன்.
Cheran Opinion on 800 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
800 என்ற பெயரில் உருவாக உள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் ஆக மாறி இருந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் சேரன் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் @VijaySethuOffl உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது என கூறியுள்ளார்.
சேரனின் இந்த பதிவுக்கு ரசிகர்களின் கருத்துக்களை பார்க்கலாம்