பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது ஏன்? என சேரன் முதல் முறையாக அதிர்ச்சிகர காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சேரன். தரமான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்லவொரு பெயரை பெற்றவர்.
இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவருக்குமே பெரும் அதிர்ச்சி தான்.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்லவொரு பெயரை எடுத்து வெளியேறினார்.
இவ்வளவு பெரிய மனிதர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொண்டார் என்ற கேள்வி இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டு தான் வருகிறது.
தற்போது அதற்கு பேட்டி ஒன்றின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார், கடந்த 4 வருடமாக எனக்கு படம் இல்லை, மோசமான சூழலில் தான் நான் இருந்தேன். யாரும் என்னை அணுகவில்லை. சும்மாவே வீட்டில் இருந்தால் யார் தான் சாப்பாடு போடுவார்கள்.
அதற்காக தான் பிக் பாஸில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார். சேரன் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.