Cheran About JaiBhim Controversy

ஜெய்பீம் சர்ச்சை குறித்து சேரன் செய்த பதிவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cheran About JaiBhim Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் வெற்றி பெற்றாலும் வன்னியர் சமூகத்தினரிடையே தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை பெற்று வந்தது. ‌‌ தங்களை தவறாக சித்தரிப்பது போல படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறியதை தொடர்ந்து படத்தில் சில காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டன.

இருப்பினும் சூர்யா வருத்தம் தெரிவிக்காதது தொடர்ந்து முடிவுக்கு வராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மேலும் இந்த கதையில் முக்கியமானவர்களில் ஒருவர் தான் கோவிந்தன். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.

தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

ஆனால் வன்னியர்கள் அவர் வன்னியர் இனத்தை சார்ந்தவர் அத்தனையையும் மூடி மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் கோவிந்தன் நான் வன்னியர் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவன். எனக்கு ஜாதி சாயம் பூச வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். இவருடைய இந்த அறிக்கையை பாராட்டு சேரன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்ய அப்போ குருமூர்த்தி வீட்ல அக்னி கலச காலண்டர் இருந்தது சரின்னு சொல்றீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! | HD

சுதாரித்துக்கொண்ட சேரன் இதற்கு முன்னதாகவே தான் ஜெயந்தியின் படத்தின் ரியல் கதாபாத்திரங்களின் பெயர் மாற்றப்பட்டது தவறு. மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என பதிவு செய்து இருந்த பதிவை சுட்டிக்காட்டி உள்ளார்.

இவருடைய இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.