நிவர் புயல் கரையை கடந்த சில மணி நேரங்களிலேயே சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க தமிழக அரசுக்கு சென்னை கார்ப்பரேஷனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Chennai Peoples Thanks to TN Government : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் என்ற பெயரில் அதி தீவிர புயலாக உருமாறி நேற்று நள்ளிரவில் சென்னை மஹாபலிபுரம் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆனால் தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் காரணமாக ஓரிரு மணி நேரங்களிலேயே சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சாதாரண மழைக்கே வெள்ளம் போல காட்சியளிக்கும் பகுதிகள் கூட தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் அதற்கு காரணமாக இருந்த தமிழக அரசுக்கும் சென்னை கார்ப்பரேஷனுக்கும் மக்கள் பலர் சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.