Chennai Metropolitan Bus Drivers Strike :
Chennai Metropolitan Bus Drivers Strike : சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை என்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்களது ஜூன் மாத சம்பளத்தில், 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதால்,
முழு ஊதியம் வேண்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் மறுத்ததால், குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயங்கபட்டன.
மேலும் வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும் , ஓட்டுநர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சனி பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ, இந்தக் கோவிலுக்கு சென்று வாருங்கள்.!
இந்த போராட்டத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை என்பதால், வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் போன்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம், ‘ ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய 40 சதவீத ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும்’ என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உறுதி அளித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்டமாக போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.