Earth Quake : சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக பல நாடுகளிலும் இடங்களிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
வங்க கடலுக்கு வடகிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் சென்னையில் காலை 7.02 மணிக்கு ரிக்டர் அளவில் 4.9 அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.