Chennai Chess Grand Master – சென்னையை சேர்ந்த 12 வயது குகேஷ் என்ற சிறுவன், உலகின் 2-வது இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்து உள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த குகேஷ், தினேஷ் சர்மாவை 9-வது சுற்றில் வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார்.
இதன் மூலம் உலகிலேயே மிக இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார்.
இதற்கு முன்னாள், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் என்பவர் உலகின் முதலாவது இளவயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்தார்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ் கூறியதாவது :
முதல் சுற்று முடிந்ததும் பதற்றமடந்தாலும், போட்டியாளர் செய்த தவறான நகர்வை சாதகமாக்கி வெற்றி பெற்றேன்.
எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
அதே போல், இன்னும் சிறப்பாக பயிற்சி செய்து உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது லட்சியம்.
அனைத்து சதுரங்க போட்டிகளிலும் அழுத்தம் அதிகமாக இருந்தது, ஆனால் என் விளையாட்டை பாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.