வலுக்கும் எதிர்ப்புகளால் திரௌபதி படக்குழு படத்தை ரிலீஸ் செய்வதில் அதிரடியான திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமாக உருவாகி இருப்பது திரௌபதி.
ஜாதி பிரச்சனைகளையும் நாடக காதலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒரு தரப்பு இப்படம் ரிலீசாக கூடாது, சென்சார் செய்ய கூடாது, தடை விதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியள்ளது.
இன்னொரு தரப்பு நிச்சயம் இது வெளியாக வேண்டிய படம், அனைவரும் பார்க்க வேண்டிய படம் என கொண்டாடி வருகிறது.
மேலும் சென்சார் அதிகாரிகளுக்கும் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டாம் என கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளனவாம்.
இதனால் படக்குழு ஒருவேளை இப்படத்திற்கு சென்சார் கிடைக்கவில்லை என்றாலோ, முக்கிய காட்சிகள் கட் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டாலோ படத்தை நேரடியாக டிஜிட்டல் சேனலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.