ரஜினியின் ஆசியுடன் இன்று “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இதனை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 17 வருடம் கழித்து தற்போது எடுக்க உள்ளனர். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வைகை புயல் வடிவேலு இணைந்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பாகுபலி படத்தை இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவங்கப்படுகிறது. அதனால் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதனை ஒரு பதிவுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அவர் வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே இன்று சந்திரமுகி 2 படம் பிடிப்பு மைசூரில் துவங்கப்படுகிறது. எனவே எனது தலைவர் மற்றும் குருவான ரஜினிகாந்திடம் ஆசி பெற்றுள்ளேன்.! உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனக்கு தேவை. என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.