Central government visit Gaja Cyclone hit districts
Central government visit Gaja Cyclone hit districts

Central government visit Gaja Cyclone hit districts – கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி, “கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை கூறி நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார் .

மேலும், தற்போது இடைக்கால நிதியாக ஆயிரத்து ஐந்நூறு கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை அறிந்து கொண்டு நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழு அனுப்புவதாக கூறினார்.

இந்நிலையில், ‘கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசு குழு இன்று மாலை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது’ .

மேலும் முதல்வரை சந்தித்த பிறகு இக்குழுவின் ஆய்வுப் பணிகள் தொடரும் என கூறப்படுகிறது. மேலும் இக்குழு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, நவம்பர் 27- ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

மேலும் இக்குழு வெளியிடும் அறிக்கையை பொறுத்து தமிழக அரசுக்கு மத்திய அரசு நிவாரண நிதியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.