Cell Phone : நம் அன்றாட வாழ்வில் போன் இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஆனால் அதிகநேரம் நாம் தொலைபேசியை உபயோகிப்பது நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சீனாவை சேர்ந்த ஒரு பெண், ஒரு வாரமாக பணியில் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.
அந்த ஒரு வாரமும், செல்போன் பயன்படுத்தியவர் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவரின் கை விரல்கள் அசைக்க முடியாமல் தவித்துள்ளார்.
பின்பு நாட்கள் கழித்து தனது வலது கையில் பலத்த வலி ஏற்பட்டு , அவரது விரல்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியபடியே அப்படியே செயல் இழந்து போனது.
இதையடுத்து, பயந்துபோன அந்த பெண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னரே, அவரது விரல்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆகையால், அதிக நேரம் செல் போன் பயன்படுத்தாதீர்கள்.