Bus conductor

Bus conductor passed away who is fight with police – ஒரு காவல் அதிகாரி செய்த அடாவடியால் அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பில் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிநாத் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். திருச்சியிலிருந்து கடலூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது விருதாச்சலத்தில் திட்டக்குடியை சேர்ந்த காவல் அதிகாரி பழனிசாமி ஏறியுள்ளார்.

அவரிடம் கோபிநாத் டிக்கெட் எடுக்குமாறு கேட்க, நான் போலீஸ் என அவர் கூறியுள்ளார். அப்போது அவர் சாதாரண உடையில் இருந்ததால் சந்தேகப்பட்ட கோபிநாத் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், நான் காட்ட முடியாது என பழனிவேல் அடாவடியாக பேசியுள்ளார். ஏறக்குறைய பேருந்து 10 கி.மீ தூரம் செல்லும் வரை அவர்களிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்த பயணிகளும் நடத்துனருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கோபிநாத் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நடத்துனர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே, பழனிவேல் பணிபுரியும் காவல் நிலையம் சென்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.