Conductor
ஓடும் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நடத்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bus Conductor misbehaved with women in running bus – சென்னையில் இருந்து மன்னார்குடி சென்ற அரசு பேருந்தில் நேற்று இரவு கோயம்பேட்டிலிருந்து தமிழ்செல்வி என்கிற பெண் ஏறியுள்ளார். நள்ளிரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது ஏதோ கைவிடுவது போல உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து உள்ளார். அப்போது அவரின் இருக்கைக்கு பின்னர் பேருந்து நடத்துநர் ராஜூ அமர்ந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்தார்.

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் : அதிர்ச்சி செய்தி

இதையடுத்து, அவரின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்துள்ளார். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கிய தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ‘வேண்டுமானால் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துக் கொள்’ என்று ராஜூ அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் ஏற்கனவே பேருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது தான் பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த முறை அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.