BJP Tamilisai Speech
BJP Tamilisai Speech

BJP Tamilisai Speech – திருப்பூர்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? அதுபோல தான் எங்கு, என்ன தடை வந்தாலும் பாஜக தொடர்ந்து பிரச்சாரத்தை செய்யும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலுமே பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. தேர்தல் குறித்த கருத்துக்களையும் இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிரடியாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது: “மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.மத்திய அரசை கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

‘சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா ?அதுபோலதான் எங்கு, என்ன தடை வந்தாலும், நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.

எத்தனை தடை வந்தாலும் சரி, பாஜக இந்த பிரச்சாரத்தை விடாமல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வரப்போகிற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறிய அவர், தமிழகத்தில் மக்களிடையே பாஜக ஐக்கியமாகி வருகிறது.

பிரதமர் மோடி வரும்போது மட்டும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டுகிறார்கள் என்று கூறினார்.

மேலும் ‘கருப்புக்கொடி காட்டும் இந்த சின்னக் கூட்டத்தை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம் எனவும், ஒரு சிறு எலியை பார்த்து யானை பயப்படாது எனவும் கூறினார். மேலும் ஆக்கபூர்வமான அரசியலை செய்யவே பாஜக விரும்புகிறது.

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் பிரதமர் மோடி வேண்டுமா அல்லது கிளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுமா,

என்பதை மக்களே முடிவு செய்யட்டும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.