Bindu Madhavi Isolated Herself
Bindu Madhavi Isolated Herself

அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரானா உறுதியானதை அடுத்து 14 நாட்கள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் பிந்து மாதவி.

Bindu Madhavi Isolated Herself : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. கழுகு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் தனக்கு வாய்ப்பு குறையவே உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலும் சீசனில் கலந்து கொண்டார்.

உலகமே கொண்டாடிய படத்தில் நடிக்க மறுத்த சூர்யா – வெளிவந்த ஷாக்கிங் தகவல், புலம்பி தள்ளும் ரசிகர்கள்

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்து மாதவி தன்னுடைய அபார்ட்மெண்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அந்த அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு குரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிந்து மாதவி தன்னையும் தன் குடும்பத்தாரையும் அடுத்த 14 நாட்கள் தனிமை படுத்திக் கொள்வதாக வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.

பிந்து மாதவி இவ்வாறு கூறியதை பார்த்த சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அவரை பாதுகாப்புடன் இருக்குமாறு கூறியுள்ளனர்.