பிக் பாஸ் வீட்டில் இருந்து தானாக வெளியேறினால் அபாரம் விதிக்கப்படும் என்பதும் அந்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலும் கசிந்துள்ளன.
Bigg Boss Show Rules : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தான் மூன்றாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு தான் இது புத்தம் புது நிகழ்ச்சி. ஆனால் மற்ற மொழிகளில் பல சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என சில விதிமுறைகள் உள்ளன. இதில் அதிர்ச்சியடைய வைக்கும் விதிமுறைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
Rewind : விளக்கமளித்த பிக் பாஸ் மது.. இது பழைய ‘கர்நாடகா’ பிரச்சினை… |
1. பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் தப்பி சென்றாலோ அல்லது அவர்களாக முன் வந்து வெளியேறினாலோ அவர்கள் டிவி சேனலுக்கு அபராதம் கொடுக்க வேண்டுமாம். அதுவும் அந்த தொகை ரூ 50 லட்சம் வரை வசூலிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
இதனால் தான் போட்டியாளர்கள் என்ன தான் வீட்டுக்கு போறேன் என கதறி அழுதாலும் வெளியே வராமல் இருப்பதற்கு காரணம்.
2. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தினால் அதற்கும் அபராதம் உண்டு. இது 50,000 முதல் வசூலிக்கப்படுமாம்.
மூன்றாவது சீசனில் முகேனிடம் அவர் வீட்டில் இருந்து வெளியேறும் போது கட்டிலை உடைத்ததற்காக நிச்சயம் அபராதம் விதிக்கப்படும்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல் கார்ட் எண்ட்ரியாக சொல்கிறாரா இந்த நடிகர்? – அவரே பதிவிட்ட ட்வீட்.!
3. போட்டியாளர்கள் எக்காரணம் கொண்டும் டிவி சேனல் அனுமதி இல்லாமல் யாருக்கும் பேட்டி கொடுக்க கூடாது. அதனால் தான் சரவணனும் மதுமிதாவும் இதுவரை பேட்டி கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.
4. பிக் பாஸ் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாதி, மதம், அரசியல் குறித்து பேச கூடாது.
இதனால் தான் மதுமிதா அரசியல் காவிரி பிரச்சனை குறித்து பேசியதை டிவி சேனல் ஒளிபரப்பவில்லை என கூறப்படுகிறது.