பிக் பாஸ் முடிந்து இத்தனை மாதங்கள் ஓடி விட்ட பிறகு சரவணனை சந்தித்துள்ளார் பெண் போட்டியாளர் ஒருவர்.
தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கல்லூரி படிக்கும் காலத்தில் செய்த தவறை குறிப்பிட்டதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் சரவணன்.
அதன் பின்னர் அவர் பிக் பாஸின் இறுதி நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸுக்கு பிறகு சாண்டி, கவின் ஆகியோர் தான் சரவணனை சந்தித்து இருந்தனர்.
இந்த நிலையில் மதுமிதா முதல் முறையாக சரவணனை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கான ஷூட்டிங் கள்ளக்குறிச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
அங்கு இருவரும் சேர்ந்து நடித்த பிறகு போட்டோ எடுத்து கொண்டுள்ளனர். அந்த போட்டோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.