டி.ஆர்.பி-க்காக தர்ஷனின் உண்மை காதலை உடைக்க பிக் பாஸ் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
Bigg Boss Plan in Tharshan Love : இலங்கையை சேர்ந்தவர் தர்ஷன். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளார்.
மேலும் இவரை வைத்து பிக் பாஸ் காதல் கதையை இயக்க திட்டமிட்டு இருந்தார், இதற்கு ஏற்றார் போல மீரா மிதுன் காதலை வெளிப்படுத்த தனக்கு காதலி இருப்பதாக தெளிவாக கூறி விட்டார்.
அதன் பின்னர் ஷெரின் தர்ஷனின் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக கூறியும் அதனை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவில்லை, தர்ஷனும் நட்பு ரீதியாக மட்டுமே பழகி வருகிறார். இதனால் பிக் பாஸின் பிளான் இங்கேயும் அவுட்டாகி விட்டது.
பிக் பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு அழகான தங்கையா? – புகைப்படங்களுடன் இதோ.!
ஆனால் இன்னமும் பிக் பாஸ் இந்த காதல் கதையை முடிக்க விரும்பவில்லை. இது குறித்து சனம் ஷெட்டி தான் தர்ஷனின் பிறந்த நாளை ஆசிரமத்தில் குழந்தைகளுடன் கொண்டாடினேன். ஆனால் அந்த வீடியோவை ஒளிபரப்ப விஜய் டிவி மறுப்பு தெரிவித்து விட்டது என கூறியுள்ளார்.
அதற்கான காரணம் அந்த வீடியோவில் நான் இருந்ததால் கூட இருக்கலாம் என பேசியுள்ளார்.
மேலும் சனம் தர்ஷனுக்காக க்ரீட்டிங்ஸ் கார்ட் அனுப்பியுள்ளார். அதையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பாமல் அவரது நண்பர்கள் கையெழுத்திட்ட கிரீட்டிங்ஸ்களை மட்டும் அனுப்பியுள்ளார்.
இதனால் TRP-க்காக தர்ஷனின் காதலை பிரிக்க பிக் பாஸ் பிளான் போட்டு விட்டார் என்ற பேச்சு எழுந்துள்ளது. எல்லா போட்டியாளர்களை போல தர்ஷனுக்கு ஏன் காதலியின் கடிதத்தை அனுப்பவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.