லாஸ்லியா மற்றும் தர்ஷனை வெளியேற்ற சேரன் சொன்ன காரணம் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
Bigg Boss Nomination : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான முதல் வார நாமினேஷன் நேற்று நடைபெற்றது.
இந்த நாமினேஷனில் சேரன் தர்ஷனையும் லாஸ்லியாவையும் வெளியேற்ற ஆசைப்படுவதாக கூறினார், அதற்கான காரணத்தையும் அவர் கூறி இருந்தார்.
அதாவது 16 பேர் உள்ள இந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டும் தான் எவ்வித அப்பழுக்கும் இல்லாமல் உண்மையாக உள்ளார்கள். ஆகையால் இந்த முகங்களுக்கு இடையில் இவர்கள் வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்களோ சேரன் சார் நீங்க சொல்றது சரி தான், ஆனால் உண்மையாக இருப்பவர்கள் தானே இந்த வீட்டில் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.