பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசன் கண்ணீர் விட்ட சம்பவம் ரசிகர்களை ஒரு நிமிடம் அமைதியாகவும் அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது.
Bigg Boss Kamal Haasan Crying : கமல்ஹாசன் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடி கொண்டிருந்த போது ஹவுஸ் மேட்ஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் ஏற்று நடத்திருந்த கதாபாத்திரமாக மாறி கமல்ஹாசனிடம் ஒரு சில கேள்விகளை கேட்டனர்.
அப்போது தளபதி விஜயாக மாறி முகேன் கமல்ஹாசனிடம் நீங்கள் கமலாக இல்லாமல் இந்த வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தால் யாராக இருக்க விரும்புவீர்கள் என கேட்டார்.
விளக்கு அணைத்த பிறகு இதெல்லாம் நடக்குதா? – உண்மையை அம்பலப்படுத்திய வனிதா.!
அதற்கு கமல் தர்ஷனாக என கூற அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அதன் பின்னர் அவர் கூறிய காரணம் அவரை கண்ணீர் விட வைத்தது மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த அங்கத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.
எனக்கு முன்னாலேயே அவர் தெனாலியாக பல்வேறு கஷ்டங்களை பார்த்தவர் என இலங்கை ஈழத்து தமிழர்கள் பட்ட வேதனைகளை நினைவு கூர்ந்து கண் கலங்கினார்.
அதன் பின்னர் சாவித்திரியாக கேள்வி கேட்ட அபிராமி ஆர் யூ ஓகே சார் என கேட்டு கமல்ஹாசன் பழைய நிலைக்கு திரும்பி விட்டாரா? என்பதை உறுதி செய்து கொண்டு கேள்வி எழுப்பினார்.