பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் ஒருவர் வெளியேற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Bigg Boss Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு சீசனிலும் பெட்டியில் ஒரு தொகையை வைத்து இதனை எடுத்துக் கொண்டு வெளியே இருப்பவர் வெளியேறலாம் என போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்.
கடந்த சீசனில் இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தி நடிகர் கவின் வெளியேறினார். அந்த வகையில் இந்த சீசனிலும் இதுபோன்ற பணப் பெட்டி ஒன்று வைத்து போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளார் பிக் பாஸ்.
மேலும் இந்த பணப் பெட்டியை ரம்யா பாண்டியன் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.