சாக்ஷி அகர்வால் மக்களை நாய்கள் என கூறியதை ஒளிபரப்பிய விஜய் டிவிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Bigg Boss Controversy Issue : சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இரண்டாவது சீசன் டல் அடிக்க தொடங்கியதால் கவர்ச்சியை அதிகம் ஒளிபரப்ப தொடங்கினர்.
தற்போது மூன்றாவது சீசன் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதற்கு கமல்ஹாஸனும் உடந்தையாக இருப்பது தான் வேதனையின் உச்சம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இருந்து சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணத்தையோ அவரின் வெளியேற்றத்திற்கு பிறகு அவரை பற்றியோ எதையும் வெளியில் கூறவில்லை விஜய் டிவி.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா? – இறுதி கட்ட ஓட்டிங் நிலவரம் இதோ.!
இதனையடுத்து மதுமிதா காவிரி பிரச்னையை பற்றி பேசியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் பேசியது என்ன என்பதை இன்று வரை வெளியே காட்டவில்லை.
மக்கள் வேண்டாம் என வெளியேற்றப்பட்ட போட்டியாளர் வனிதா, அவரை மீண்டும் உள்ளே அனுப்பி சுயலாபத்திற்காக தொடர்ந்து அவரை தக்க வைத்து வருகிறது விஜய் டிவி. தலைவர் போட்டியில் வனிதாவை ஜெயிக்க வைக்க விஜய் டிவி ஆடிய நாடகங்கள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.
சரவணனை பற்றியோ, மதுமிதாவின் பிரச்சனையை பற்றியோ ஒளிபரப்பரப்ப மறுத்த விஜய் டிவி சாக்ஷி அகர்வால் மக்களை நாய் என பேசியதை ஒளிபரப்பியது விஜய் டிவி மக்களை நாய் போல தான் நினைத்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது.
மதுமிதா பேசியவைகளை சென்சார் செய்த விஜய் டிவிக்கு சாக்ஷி அகர்வால் மக்களை கொச்சையாக பேசியதை சென்சார் செய்ய முடியாதா என்ன? உங்களின் சுய லாபத்திற்காக மக்களை எப்படி வேண்டுமானாலும் சித்தரித்து கொள்ளலாமா? என ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர்.
மேலும் மக்களை இழிவாக பேசும் விஜய் டிவியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இளைஞர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வரும் விஜய் டிவியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் சமூக வளையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
மக்களை கொச்சையாக பேசியதை ஒளிபரப்பிய விஜய் டிவிக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி மக்களின் பலத்தை உணர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இது போன்ற மோசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனா நாட்டுக்கு நல்லது செய்து விட போகிறார்? மக்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரமிது. மக்களுக்கு எதிராக செயல்படும் டிவி சேனலையும் அதற்கு உடந்தையாக இருக்கும் கமல்ஹாசனையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துகள் பெருகி வருகின்றன.