Bigg Boss Contestant Re-entry

போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss Contestant Re-entry : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்று 94வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. நேரடியாக போட்டியாளர் ஒருவரை பைனலுக்கு அனுப்பும் டிக்கெட் டூ பின்னாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனிதா சம்பத் மட்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய மாட்டார் என தகவல் கிடைத்துள்ளது.

அவருடைய தந்தை இறந்து ஒரு வாரமே ஆகிறது. அவருடைய ஈமச் சடங்குகள் நடைபெற உள்ளதால் அவர் பிக் பஸ் வீட்டிற்குள் நுழைய மாட்டார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் என்ன நடக்கிறது? யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.