பிக்பாஸ் அனிதாவின் கணவர் திடீரென வெளியிட்ட பதிவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Bigg Boss Anitha Husband Tweet : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று தேசங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி 20 நாட்கள் முடிந்து விட்டன. முதல்வார எவிக்ஷனாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டுள்ளார். இரண்டாவது வாரத்தில் யார் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்டு உள்ளார். ஆரம்பத்தில் இருந்தே இவர் மக்கள் மத்தியில் வரவேற்பு வெறுப்பு என இரண்டையும் சமமாக பெற்று வருகிறார்.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் அனிதா குறித்து பதிவிட்டதற்கு அனிதாவின் கணவர் பிரபா அவரிடம் சண்டையிட்டார். இந்த நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதாவை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவின் காதலித்த நாட்களில் கூட இத்தனை நாள் அனிதாவை பார்க்காமல் இருந்ததில்லை. அவரை பார்க்காமல் 30 நாட்கள் ஆகிவிட்டது. இது எனக்கே புதியதாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.