முகெனுக்கும் அபிராமிக்கும் பிற்ந்த குழந்தை என தொடங்கிய விளையாட்டு பிக் பாஸ் வீட்டில் பெரிய போர்களத்தையே உருவாக்கியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
அபிராமி விளையாட்டாக ஒரு வாட்டர் பாட்டிலை வைத்து இது எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என கூறி வந்தார்.
அவர் இவ்வாறு கூறியதை கலாச்சார சீர்கேடு என கூறி போர்க்கொடி தூக்கி விட்டார் ஜாங்கிரி மதுமிதா.
அப்போவே இப்படியா? பள்ளி பருவத்தில் லாஸ்லியா எப்படி இருந்திருக்கார் பாருங்க.!
இது குறித்த பஞ்சாயத்து கமலிடமும் வர அபிராமி என்னுடைய பெயரை எதற்கு டேமேஜ் செய்ய வேண்டும் என அழுதுள்ளார்.
அபிராமி செய்வதால் உனக்கு என்ன பிரச்சனை என ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பமும் மதுமிதாவை கேட்க அவர் சொன்னதையே தான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது போட்டியாளர்கள் அனைவரையுமே அப்செட்டாக்கியுள்ளது.