பிக் பாஸ் சீசன் 5 வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.
Bigg Boss 5 Set : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருந்தது.
இதற்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்துள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது சூட்டிங் தொடர்பான வேலைகள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. 150 பணியாளர்கள் வேலை செய்து வந்த நிலையில் அதில் ஆறு பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னரும் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று உள்ளது.
இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி காவல்துறை மற்றும் தாசில்தார் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.